பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்தல் - மீண்டும் விளக்கமளித்த அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்தல் - மீண்டும் விளக்கமளித்த அரசு!

தடுப்பூசி அட்டைகள் பொது இடங்களுக்குச் செல்லும்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பரிசோதிக்கப்படும் என்று அரசு தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று இதற்கு முன்புள்ள அறிக்கையில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இலங்கை இன்னும் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்படவில்லை.

இதுவரை மேல் மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் பின்வரும் சதவீதங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன:

கொழும்பு: 51%

கம்பஹா: 48%

களுத்துறை: 55%

இதற்கிடையில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.