VIDEO: கொரோனா விரைவான ஆன்டிஜென் கருவிகள் இறக்குமதியில் ஊழல் - அரசுடன் நெருங்கியவர் என அம்பலம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கொரோனா விரைவான ஆன்டிஜென் கருவிகள் இறக்குமதியில் ஊழல் - அரசுடன் நெருங்கியவர் என அம்பலம்!!!

ஓமல்பே சோபித தேரர் உட்பட பௌத்த தேரர்களின் செல்வாக்குள்ள ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து அரசின் பங்காளிகள் அதிக இலாபம் ஈட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கைக்கு விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் (RAT) கருவிகளை இறக்குமதி செய்யும் நிறுவனம், நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படும் ஒவ்வொரு சோதனை கருவியிலும் சுமார் ரூ. 24,000 வரை தூய இலாபம் ஈட்டுகிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றும் போது குறித்த தேரர் தெரிவித்தார்.

சோதனை கருவிகள் (RAT) ஒவ்வொன்றும் 10 சோதனை மாதிரிகளை கொண்டதும் ஒவ்வொன்றும் ரூ. 800 (USD 4) விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார். தனியார் மருத்துவமனைகளில் நோயாளி ஒருவரிடம் மாதிரியொன்றுக்கு ரூ. 2500 அறவிடுவதாக ஓமல்பே சோபித தேரர் கூறினார். சோதனை மாதிரியின் ஒன்றின் விலை ரூ. 100 இற்கும் குறைவாக இருப்பதாக என்று தேர்ச் மேலும் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், இந்தியா மருத்துவமனைகளில் விரைவான ஆன்டிஜென் சோதனை ஒன்றிற்கு இந்திய ரூ. 150 (INR) செலவாகும். மேலும் பெரும்பாலான நாடுகளில் ஆன்டிஜென் சோதனை மாதிரிகளானது மிகக் குறைந்த விலையாக காணப்படுவதால் ஆன்டிஜென் சோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.

"தொற்றுநோயால் ஏற்படும் நோய் மற்றும் துயரத்திலிருந்து குறித்த நிறுவனம் இலாபம் ஈட்டுவதை கண்டுகொள்ளாது அரசாங்கமானது நாட்டு மக்களுக்கு கடுமையான அநீதி மற்றும் ஊழலுக்கு வழி வகுத்துள்ளது" என்று சோபித தேரர் மேலும் குற்றம் சாட்டினார்.

ஜார்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் நிறுவனமானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமானவர் என்பதுடன் தெரண தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திலித் ஜயவீரவுக்கு சொந்தமானதுடன், நாட்டுக்கு RAT கருவிகளை இறக்குமதி செய்யும் ஒரே உரிமம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டிஜன் சோதனை கருவிகளுடன் தொடர்புடைய ஊழல் நீண்ட காலமாக பாராளுமன்ற விவாதத்திற்கு உட்பட்டதுடன் குறிப்பாக சிரச மீடியா தொலைக்காட்சியில் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டுல் வருகின்றது.
திலித்  ஜயவீர மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 
நியூஸ்ஃபர்ஸ்ட் (எம்டிவி) நிறுவனமானது இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிடுவதைத் தடுக்க ஜயவீர நீதிமன்றத்திற்குச் சென்றார். மேலும் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் தன்னை அவதூறு செய்வதாகக் கூறினார். ஜயவீரவின் வலிமையான சட்ட மற்றும் பண செல்வாக்கு மற்ற ஊடக நிறுவனங்களை இந்த பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துவதைத் தடுத்துவிட்டது. மக்கள் விடுதலை முன்னணி இந்த ஊழலை பலமுறை சுட்டிக்காட்டியது. RAT கருவிகளை இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு ( ஜார்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த்) எந்த அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாடு முழுவதும் 500,000 ஜிம்களை உருவாக்க விளையாட்டு அமைச்சின் திட்டம் உட்பட பல அரசு திட்டங்களில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மதகுருமார்கள் மத்தியில் முன்னோடியில்லாத வகையில் ஆதரவை இழந்துள்ளதோடு, அவர்களில் பெரும்பாலோர் இரு வருடங்களுக்கு முன்பு அவரது ஜனாதிபதி பதவிக்காக ஆர்வத்துடன் ஆதரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம் - Colombo Telegraph

தமிழாக்கம் - யாழ் நியூஸ்





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.