கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியவை இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியவை இது தான்!

இலங்கை முழுவதும் தற்போது கொவிட்-19 நோயானது மிகத் தீவிரமாக பரவி வருகின்றது. இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தவறியவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் இப்பரம்பலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மூன்று வழிகளே உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி முதலாவதாக அவசியமற்ற ஒன்றுகூடல்களை, விழாக்களை தவிர்த்துக்கொள்ளுதல். அவசியமின்றி வீடுகளுக்கு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வணக்கஸ்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை உட்பிரகாரங்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மட்டுமே நடாத்த அனுமதி வழங்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக பல ஆலயங்களில் நடந்த திருவிழாக்கள் மூலம் கொரோனா தொற்று மிக வேகமாக பரவியதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இரண்டாவதாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்கின்ற வேளைகளில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும். கைகளை கிரமமாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவதாக பொதுமக்கள் கட்டாயமாக தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

இனிமேல் வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம். எனவே இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.