உடன் தயார்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் தயார்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி!

பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு (DOSE) சுமார் 100 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது மருந்தளவு (DOSE) சுமார் 56 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந் நிலையில், தடுப்பூசி செலுத்தி முழுமை பெற்றதன் பினனரும், கொரோனா பரவுமாக இருந்தால், அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது என்னவென்பது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.