ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்கு அச்சுறுத்தலா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்கு அச்சுறுத்தலா?

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு தோல்வியடைந்துள்ளமைக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணியே பிரதான காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனின், கொரோனா செயலணியிடம் இருந்து அந்த கடமைகளை அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

டெல்டா இன்று உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளோம்.

மக்கள் இன்று வைத்தியசாலைகளில் இருக்கின்ற நிலை கவலைக்குரியது. கொரோனா தொற்று தடுப்பு செயலணி இருக்கும் வரையில் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.