நாட்டில் கொரோனா பரவல் சடுதியாக அதிகரித்த காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா பரவல் சடுதியாக அதிகரித்த காரணம் இது தான்!

சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் ஒன்றுகூடுவதாலேயே நாடு பூராகவும் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்ததாக புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டினர்.

கொவிட் தடுப்பு விசேட குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில், நாடு பூராகவும் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குறைந்தது 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றாது இவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவது, நாடு பூராகவும் வேகமாக கொவிட் நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகியுள்ளதென்று, புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டினர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.