நாடளாவிய ரீதியில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.