தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4.00 வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், நெடுஞ்சாலை மற்றும் சாலை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.