இசை கலைஞர் இராஜின் கன்னத்தில் அறைந்தாரா யோஷித்த? வெளியான தகவல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இசை கலைஞர் இராஜின் கன்னத்தில் அறைந்தாரா யோஷித்த? வெளியான தகவல்!!


கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே இராஜ் வீரரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பாடகர் இராஜ் வீரரத்ன அந்த பதவியை நேற்று (25) இராஜினாமா செய்திருந்தார்.

தனது இராஜினாமா தொடர்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிய அவர், தனக்கு தனிப்பட்ட வேலைகள் உள்ளமை காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்தில் அறைந்தமையே அவரின் இராஜினாமாவுக்கு காரணம் என்று தகவல் பரவியது.

இது தொடர்பில் டெய்லி மீரருக்கு கருத்து வெளியிட்ட  யோஷித்த ராஜபக்ஷ இராஜ் வீரரத்னவுக்கு தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார்.

அத்துடன்,  அவரை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்வொன்றில் சந்தித்தாக கூறிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்ன, பதவி விலகியமைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.