இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை குழு சர்ச்சையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை குழு சர்ச்சையில்!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெற்றிக்கொள்வதற்காக குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வீர, வீராங்கனைகளின் மன வலிமையை உறுதிப்படுத்தவும் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இளைஞர், விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பதிலளிக்கையில்,

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றிக்கொள்ள ஒரு நாடு 10 முதல் 15 வருடங்கள் தயாராகின்றன.

இம்முறை ஜப்பானும் அவ்வாறானதொரு முறைமையை பின்பற்றியே பதக்கங்களை வெற்றிக்கொண்டு வருகிறது.

எமது நாட்டில் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

விளையாட்டு கவுன்சில் ஊடாக 2032ஆம் ஆண்டுவரையான பத்தாண்டு திட்டமொன்றின் ஊடாக இந்த இலக்கை அடைந்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த ஆடை தொடர்பில் சமூக வலையத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளோம்.

சில வீரர்கள் தாம் வழமையாக அணியும் ஆடையை அணிவதாக ஒலிம்பிக் குழுவிடம் கூறியுள்ளனர். அவ்வாறு இடம்பெற முடியாது என்றார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.