ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தோர் பலர் கைது - வாகனங்களும் பறிமுதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தோர் பலர் கைது - வாகனங்களும் பறிமுதல்!

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 16 பெண்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு பிரதான வீதி முடங்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் , அதனை மீறி செயற்பட்டமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு 10 வாகனங்களும் பொலிஸாரின் பொறுப்பிலெடுக்கப்பட்டுள்ளன.

சட்ட விரோத மக்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டமை, பிரதான வீதியை முடக்கியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.