தினசரி அறிவிக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை போலியானது - வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தினசரி அறிவிக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை போலியானது - வெளியான அதிர்ச்சித் தகவல்!

இன்று, தினசரி அறிக்கையிடப்படும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை துல்லியமற்றது எனவும், சரியான சிகிச்சை இல்லாமல் மருத்துவமனைகளில் நிகழும் இறப்பு எண்ணிக்கையினை கணக்கில் எடுத்துக்கொண்டால் இதன் எண்ணிக்கை இரு அல்லது மூன்று மடங்காக இருக்கும் என்று, துணை மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த தினசரி இறப்புகளில் தடுக்கக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக என்று அதன் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று தொற்றாளர்கள் இனங்காணப்படுவது, தானே முன் வந்து வருபவர்களேயன்றி அரசினால் இனங்காணப்படுபவர்கள் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, தற்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதை விட சமூகத்தில் நான்கு முதல் ஐந்து மடங்கு தொற்றாளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்ட அரசாங்கத்தின் சில பிரிவுகளின் அறிவற்ற நடத்தை காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.