கலுபோவலை வைத்தியசாலை கொரோனா நிலவரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கலுபோவலை வைத்தியசாலை கொரோனா நிலவரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் தினமும் 5-7 நபர்கள் கொரோனா தொற்றினால் இறப்பதாக அதன் பணிப்பாளர் டாக்டர் சாகரி கிரிவம்தெனிய தெரிவித்தார்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை வீட்டிற்கு அனுப்ப கடந்த வாரம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவசர நிலை காரணமாக மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டாலும், அவசர அறுவை சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படுக்ம் என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 24% நோயாளிகளுக்கு ஒட்சிசன் தேவைப்படுவதாகவும், மருத்துவமனையின் 34 வார்டுகளில், ஆறு வார்டுகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.