அமைச்சரவை கூட்டத்தில் கொதித்தெழுந்த பிரதமர் மஹிந்த!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சரவை கூட்டத்தில் கொதித்தெழுந்த பிரதமர் மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளாத நிலையில் பிரதமரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களுக்கே மஹிந்த எச்சரிக்கை விடுத்ததோடு, அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

மேலும் நாட்டை மூட வேண்டாம் என அமைச்சரவையில் இணக்கம் வெளியிட்டு, வெளியே சென்று எதிர்ப்பு வெளியிடுவது பொருத்தமான செயல் அல்ல எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எதிர்க் கருத்து இருக்குமானால் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் அமைச்சரவையில் அதனை கூறியிருக்கலாம் எனவும் கடுமையாக பேசியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தவறு இல்லை என்றாலும் அதனை ஊடகங்களிடம் வழங்குவது தவறு என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு செயல்படுவதன் மூலம், அமைச்சரவையில் பேசுவதற்கு போதுமான ஜனநாயகம் இல்லை எனவும், அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் மக்கள் உணர்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.