வடகொரிய அதிபருக்கு என்ன நேர்ந்தது? வெளியான புகைப்படம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வடகொரிய அதிபருக்கு என்ன நேர்ந்தது? வெளியான புகைப்படம்!

தலையின் பின் பகுதியில் பண்டேஜ் உடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் பற்றிய எந்த தகவலும் வெளி உலகுக்கு உறுதியாக தெரிவது இல்லை. இதனால், அவரது உடல் நிலை குறித்து அடிக்கடி யூகங்கள் பரவும்.

இந்நிலையில், நேற்று இவ்வாறான கிம் ஜோங் உன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ஜூலை மாத இறுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடும் வகையில் இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அவருக்கு உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சில நாட்களுக்குப் பின் பண்டேஜ் நீக்கப்பட்டதாகவும் வடகொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.