கொழும்பு பகுதியில் நடமாடும் வர்த்தகம் செய்வோருக்கான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு பகுதியில் நடமாடும் வர்த்தகம் செய்வோருக்கான அறிவிப்பு!


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், ​​கொழும்பு மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட விற்பனையாளர்களால் மட்டுமே நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.


இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க மீகொட, நாரஹேன்பிட்ட, இரத்மலானை மற்றும் பொகுந்தரவில் உள்ள பொருளாதார மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி மொத்தமாக 12,294  நடமாடும் விற்பனையாளர்கள் மற்றும் 1,489 மொத்த விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,345 விநியோக வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.