பெண்ணொருவரின் புகைப்படத்தை பேஸ்புக் மூலம் பதிவிறக்கம் செய்து, நிர்வாணமாக்கி கப்பம் கோரிய இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவரின் புகைப்படத்தை பேஸ்புக் மூலம் பதிவிறக்கம் செய்து, நிர்வாணமாக்கி கப்பம் கோரிய இருவர் கைது!


பெண்ணொருவரின் நிர்வாணப்படத்தை காட்டி அச்சுறுத்தி, கப்பம் கோர முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் எம்பிலிப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பேஸ்புக் மூலம் பெண்ணொருவரின் புகைப்படத்தை பெற்று, அதனை நிர்வாணப் படமாக திரிபாக்கி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனுப்பி இருவர் கப்பம் கோரியமை தொடர்பில் கடந்த 25ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.


இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, நேற்று சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு கணினிகளும், 2 கைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.


பொலன்னறுவை மற்றும் அங்கொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 23 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரகசிய கணினி செயலியொன்றின் மூலம் சந்தேக நபர்கள் குறித்த புகைப்படத்தை திரிபுப்படுத்தி, போலி பேஸ்புக் கணக்கின் ஊடாக இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


சந்தேக நபர்களை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.