கோவிட் நெருக்கடியில் மோசடி செய்தவர்களை அம்பலப்படுத்திய வைத்தியரை சிஐடி விசாரணைக்கு அழைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோவிட் நெருக்கடியில் மோசடி செய்தவர்களை அம்பலப்படுத்திய வைத்தியரை சிஐடி விசாரணைக்கு அழைப்பு!


முன்னாள் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு அனுப்பியுள்ளது.


ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடன் ஒரு யூடியூப் நேர்காணலின் போது அவர் கூறிய பல கருத்துக்களுக்காக அவர் இவ்வாறு வரவழைக்கப்படவுள்ளார்.


நேர்காணல் குறித்து அறிக்கை பதிவு செய்ய சிஐடயினர் வைத்தியர் பண்டாரவை நாளை காலை வரவழைக்க அழைப்பு விடுத்துள்ளதாக வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.


கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைச்சில் முக்கிய பங்கு வகித்த வைத்தியர் ஜெயருவன் பண்டார பின்னர் அவரது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.


அதேநேரம், சமுதித்த உடனான உரையாடலின் போது, நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமையை கையாள்வது குறித்து கடுமையாக விமர்சிர்த்திருந்தார். மேலும் பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளின் அதிக விலை நிர்ணயம் குறித்தும் விமர்சித்திருந்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.