சவூதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!! 8 பேர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!! 8 பேர் காயம்!


சவூதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அயல் நாடான ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் போரிட்ட சவூதி தலைமையிலான கூட்டணி இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளது.


முன்னர் அறிவிக்கப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அபா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்க முயன்ற இரண்டாவது ட்ரோன் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கூட்டணியின் அதிகாரபூர்வ அல் - எக்பாரியா தொலைக்காட்சி சேவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


வெளியான தகவலின்படி, எட்டு பேர் காயமடைந்ததுடன் ஒரு சிவில் விமானம் சேதமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.