“ஸ்பாக்கள்” (SPA) ஏன் திறக்கப்பட்டன? சுகாதார அமைச்சின் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“ஸ்பாக்கள்” (SPA) ஏன் திறக்கப்பட்டன? சுகாதார அமைச்சின் விளக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதுடன்,  “ஸ்பாக்களையும்” (SPA) திறக்க அனுமதி வழங்கப்பட்டன. இதற்கான தெளிவுபடுத்தளை சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

ஸ்பாக்களை மீண்டும் தொடங்குவதற்கு சிறப்பு காரணம் இல்லை என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்தார். 

"ஆரம்பத்தில் நாம் கடுமையான வழிகாட்டுதல்கள் கடைப்பிடித்து, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைவடைந்து வருகையில், ​​நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை நாம் எளிதாக்க வேண்டும். இப்போது, ​​நாங்கள் படிப்படியாக கட்டுப்பாடுகளை அகற்றி வருகின்றோம்” என்று அவர் தெரிவத்தார். 

பல பிரிவுகளின் கீழ் உள்ள நிறுவனங்கள் மீண்டும் கட்டங்களில் திறக்கப்பட்டன, அத்தகைய அளவுகோல்களின் அடிப்படையிலேயே ஸ்பாக்கள் மீண்டும் திறக்கப்பட்டதாக டாக்டர் ஹெரத் மேலும் தெரிவித்தார். 

இருப்பினும், செயல்பாடுகள் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் பெறப்படாவிட்ட, முடிவுகள் மீண்டும் திருத்தப்படும் என்று அவர் மேலும் எச்சரித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.