முழுமையாக முடக்குவதாக அறிவித்திருந்த போதும், அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. முந்தைய செய்திக்கு வருந்துகின்றோம்.
கல்முனையின் மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று (01) வியாழக்கிழமைதொடக்கம் ஒரு வார காலத்துக்குள் அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்றசுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர். முடிவுகளின் பிரகாரம்தொற்றாளர்கள் இனங்காணாமையால் முற்றாக முடக்குவதில்லை என. இன்று கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மருதமுனை பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்குதீர்மானிக்கப்பட்டள்ளதுடன் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.வாஜீத், கல்முனைபிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,மாநகர சபைஉறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர்,கல்முனை இராணுவ லெப்டினன்ட் குலசேகர, கல்முனை பொலிஸ் நிலையப் பதில் பொலிஸ்பொறுப்பதிகாரி எம்.உதயான்கே கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், உட்படவைத்தியர்கள், மருதமுனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்,மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கல்முனையின் மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று (01) வியாழக்கிழமைதொடக்கம் ஒரு வார காலத்துக்குள் அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்றசுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர். முடிவுகளின் பிரகாரம்தொற்றாளர்கள் இனங்காணாமையால் முற்றாக முடக்குவதில்லை என. இன்று கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மருதமுனை பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்குதீர்மானிக்கப்பட்டள்ளதுடன் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.வாஜீத், கல்முனைபிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,மாநகர சபைஉறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர்,கல்முனை இராணுவ லெப்டினன்ட் குலசேகர, கல்முனை பொலிஸ் நிலையப் பதில் பொலிஸ்பொறுப்பதிகாரி எம்.உதயான்கே கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், உட்படவைத்தியர்கள், மருதமுனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்,மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.