சுற்றுலாப்பயணிகளின் வருகையா கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் ?? அமைச்சர் பிரசன்ன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலாப்பயணிகளின் வருகையா கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் ?? அமைச்சர் பிரசன்ன

சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது என தெரிவிப்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது இரண்டாவது மூன்றாவது அலைகள் சுற்றுலாப்பயணிகள் காரணமாகவே உருவாகின என அதிகாரிகளே அல்லது அரசாங்கமோ தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகநாடுகள் சுற்றுலாப்பயணிகளிற்கு கதவுகளை மீண்டும் திறந்துள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் மூடிவைத்திருந்தால் பெரும் இழப்புகளை சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்ததும் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனையின் போது பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்படும் சுற்றுலாப்பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் நாட்டை சுற்றிப்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.