மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மக்களே அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மக்களே அவதானம்!

இலங்கையில் மீண்டும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது நாளாந்தம் 1,700க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில் நாட்டில் நேற்று மாத்திரம் 1,815 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 30 பேரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,785 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 293,113 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 265,708 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.