“மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்” - கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்” - கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம் எனத் தெரிவித்து கறுப்பு ஜுலைக் கலவரத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்று பிற்பகலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இந்த போராட்டத்தை நடத்தியது.

மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சத்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதன்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்,இனவாதம் வேண்டாம்,தமிழ் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு உரிமைகளை பாதுகாக்கவும் எனகோரி பதாதைகளை தாங்கியிருந்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.