பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகையால் கொழும்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகையால் கொழும்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

கொழும்பில் வழமைக்கு மாறாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய நாட்களில் பெருமளவு வாகனங்கள் நிறைந்து காணப்படும் எரிபொருள் நிலையங்களில நேற்று ஒரிரு வாகனங்கள் மாத்திரமே வருகைத்தந்ததாக எரிபொருள் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படும் எரிபொருள் நிலையங்கள் உட்பட பல வெறுமையாக காணப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதற்கான உரிய காரணம் அறியவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நேற்றையதினம் நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் சாரதிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.