மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பம்!

கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, தோட்டப் பகுதிகளில் இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு இன்று (05) முதல் பாடசாலை வகுப்பறைகளிலிருந்து குறித்த  வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டன.

ஹட்டன் மற்றும் நுவெரெலியா கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மையங்களாக நியமிக்கப்பட்டு, மையத்தில் இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லாத பிற பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும், குறித்த பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. 

இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இருக்கும்  மாணவர்கள் தமது வீடுகளில் இருந்தே இவ்வகுப்புக்களில் பங்கேற்கலாம்.

பாடசாலை வகுப்பறையில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.