பிறந்த குழந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற தாய்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறந்த குழந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற தாய்!

கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டள்ளது.

இம்மாதம் 28 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்னொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை தவறான உறவின் மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த குற்றச் செயலுடன் தொடர்புடைய மூன்று பிள்ளைகளின் தாயாரை கந்தளாய் பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரின் கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையிலே இவ்வாறு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.