
இதன்படி கமகே என்பவரே இவ்வாறு பெரும் மதிப்புள்ள மாணிக்க கல்லுக்கு சொந்தக்காரர் என்பதுடன் அவர் தனது முழு பெயர் மற்றும் வதிவிடத்தை பாதுகாப்பு கருதி வௌியிடாமல் உள்ளார்.
இந்த கல்லை சுத்தப்படுத்தி சரியான பெறுமதியை கணக்கிட ஒரு வருடங்கள் ஆகும் என கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை "இது சிறப்பான நட்சத்திர நீலக்கல் தொகுப்பு. உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்களுக்கும், இரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும் என நினைக்கிறோம்," என்று இலங்கை தேசிய இரத்தினங்கள், ஆபரணங்கள் கூட்டுத்தாபன தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில், சுமார் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பு கொண்டது எனவும் இலங்கை பெறுமதியில் 4000 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட்ஸ் எடையைக் கொண்டுள்ளது. இந்த மாணிக்க கல்லுக்கு "Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக இலங்கையின் இரத்தின தொழில்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.