கழிப்பறையில் ரிஷாத் பதியுதீன் செய்த செயல் - பொலிஸாரிடம் சிக்கினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கழிப்பறையில் ரிஷாத் பதியுதீன் செய்த செயல் - பொலிஸாரிடம் சிக்கினார்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மருத்துவமனையில் இருந்தபோது மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் அவர் தாள் ஒன்றில் மறைத்து கழிப்பறையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மருந்துகளை கழிப்பறை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததோடு, பொலிஸார் அதிகாரிகள் அவற்றை மருத்துவர்களிடம் காண்பித்துள்ளதோடு, அவை அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமி தீ விபத்திற்கு உள்ளாகி இறந்த அதே தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தனியார் மருத்துவமனை அல்லது பணம் செலுத்தக்கூடிய வார்டில் தங்குமிடம் கேட்டிருந்தார், ஆனால் குற்றப்புலனாய்வினர் இவரது கோரிக்கையினை மறுத்துள்ளனர்.

இவரை நேற்று (24) மதியம் மருத்துவமனையில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அனுமதி வழங்கியிருந்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.