ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில்ர்ர் ராஜபக்சவின் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் பெயர் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளதாக அரசு அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நேற்று (06) தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்சியின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.(யாழ் நியூஸ்)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் பெயர் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளதாக அரசு அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நேற்று (06) தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்சியின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.(யாழ் நியூஸ்)