நாட்டிற்கு ஏற்படவிருக்கும் அழிவு - மக்களே அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டிற்கு ஏற்படவிருக்கும் அழிவு - மக்களே அவதானம்!

இலங்கையில் டெல்டா மாறுபாடு பரவாமல் தடுக்க அரசாங்கம் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள புதிய செயல் திட்டம் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே பல பகுதிகளில் பரவியிருக்கும் இந்திய மாறுபாடு நாட்டில் அதிகமான பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்பதை தீர்மானிக்க சரியான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.

இந்த நிலையில் அரசாங்கம் நிலைமையை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் ஒரு பெரிய அழிவு தவிர்க்க முடியாதது என்று உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

அரசாங்கம் டெல்டா பரவலை தடுக்க எச்சரிக்கையுடன் இருப்பதாக கூறுகின்ற போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மறுபுறத்தில் கோவிட்டின் ஆபத்து சமூகத்திலிருந்து மறைந்துவிட்டதைப் போல மக்கள் நடந்துகொள்கிறார்கள். எனினும் ஆபத்து இன்னும் இருக்கிறது என்று உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.