2020 பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2020 பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான செய்தி!

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை வெகுவிரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதுடன் செயல்முறை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு வார காலத்துக்குள் உறுதியான தீர்மானத்தை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்குவாரென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம், 2020 ஆம் ஆண்டு கொவிட் -19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

கடந்த வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வழமைக்கு மாறாக விரைவாகவே வெளியிடப்பட்டது. உயர்தர பரீட்சை பெறுபேறும் நெருக்கடியான சூழ்நிலையில் வெளியிடப்பட்டது.

கொவிட் -19 தாக்கத்தின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரன தர பரீட்சை உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

சிறந்த திட்டமிடலுக்கமைய சாதாரண தர பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலிரண்டு வாரத்தில் நடைபெற்றது. பரீட்சை பெறுபேற்றை ஜூன் மாதம் வெளியிட ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.

புதுவருட கொவிட் 19 கொத்தணி கடந்த காலங்களை காட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாடசாலை மற்றும் பரீட்சைகள் திணைக்கள் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன. சாதாரன தர பரீட்சையின் எழுத்துமூல விடைப்பத்திரங்கள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று அவை தரவுப்படுத்தப்பட்டுள்ளன.

சாதாரண தர பரீட்சையின் செயல் முறை பரீட்சையின் புள்ளிகளை தரவுப்படுத்துவது மாத்திரமே மிகுதியாகவுள்ளது.

செயல் முறை பரீட்சையை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.

கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு வாரத்துக்குள் உறுதியான தீர்மானத்தை வழங்குவாரென எதிர்பார்க்கிறோம் என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.