நாட்டில் ஒரு கிராமம் அல்லது தொழிற்சாலை ஒன்றை தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக அரசு செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சோதனைகளில் இருந்து 15% அல்லது 20% கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சோதனைகள் செய்யப்பட்டால், தேசிய மருத்துவமனையில் 10,000 ஊழியர்களில் 20% இற்கும் அதிகமானோ கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
கொரோனாவை இல்லாதொழிப்பதற்கு பதிலாக, மக்கள் இன்று கொரோனாவுடன் வாழப் பழகுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவரது குடும்பத்தினர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் இவ்வாறு சோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதில், தொற்றாளர்களின் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் இன்று மக்கள் கொரோனாவுடன் எவ்வாறு வாழ முயற்சிக்கின்றனர் என்பதை பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் கொழும்பில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இதுபோன்ற சோதனைகளில் இருந்து 15% அல்லது 20% கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சோதனைகள் செய்யப்பட்டால், தேசிய மருத்துவமனையில் 10,000 ஊழியர்களில் 20% இற்கும் அதிகமானோ கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
கொரோனாவை இல்லாதொழிப்பதற்கு பதிலாக, மக்கள் இன்று கொரோனாவுடன் வாழப் பழகுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவரது குடும்பத்தினர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் இவ்வாறு சோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதில், தொற்றாளர்களின் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் இன்று மக்கள் கொரோனாவுடன் எவ்வாறு வாழ முயற்சிக்கின்றனர் என்பதை பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் கொழும்பில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)