நாடு திறக்கப்பட்ட பின்னர் வருகை தந்த 183 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு திறக்கப்பட்ட பின்னர் வருகை தந்த 183 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று!

சுற்றுலாப்பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்ட பின்னர் நேற்று வரை நாட்டிற்கு வருகை தந்த 17,469 சுற்றுலாப் பயணிகளில் 183 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

குறித்த 183 தொற்றாளர்களில் 138 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட ஒழுங்குமுறை சுற்றுலா திட்டத்தின் கீழ் மொத்தமாக 2,258 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்,

அவர்களில் 09 நபர்கள் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு இலக்காயுள்ளனர்.

ஜனவரி முதல் ஜூலை 04 வரை அதிக எண்ணிக்கையிலான (4581) சுற்றுலாப் பயணிகள் மார்ச் மாதமே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கொரோனா தொற்று நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டதன் பிற்பாடே நாட்டில் பரவியதாக பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க தெரிவித்தார்.

நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதை விரைவுபடுத்துவதற்குறிய அறிக்கை ஒன்றை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.