பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கன்னத்தில் நபர் ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பச்சை நிறடீசேர்ட் அணிந்த ஒருவர் ஜனாதிபதியின் முகத்தில் ஓங்கி அறைவதையும் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் முன்னால் வந்து அவரை பாதுகாப்பாக அழைத்து செல்வதையும் வீடியோ காண்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து இருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்ரோனிச கொள்கைகள் ஒழிக என அந்த நபர் கோஷங்கள் எழுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.