இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டு விளையாடிவரும் வரும் நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த இருபதுக்கு 20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் காணொளி ஊடாக கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா, இலங்கை அணியின் தோல்விக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நிலையிலும் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள 3 கிரிக்கட் வீரர்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும், இது தொடர்பில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் காணொளி ஊடாக கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா, இலங்கை அணியின் தோல்விக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நிலையிலும் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள 3 கிரிக்கட் வீரர்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும், இது தொடர்பில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.