08 நாட்டு பயணிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு இலங்கை நுழைய தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

08 நாட்டு பயணிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு இலங்கை நுழைய தடை!

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கை வரு பயணிகளுக்கு இலங்கை ஜூன் 30 நள்ளிரவு முதல் ஒரு மாத மாத பயணத் தடை விதித்துள்ளது.

இப்பயணத் தடையானது 2021 ஜூலை 1 ஆம் தேதி 0001 மணி முதல் 2021 ஜூலை 31 ஆம் தேதி 2359 மணி வரை (இலங்கையில் உள்ளூர் நேரம்) அமுலில் இருக்கும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் அங்கோலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவாசிலாந்து, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு பயண வரலாறு கொண்ட பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேற்கூறிய எந்தவொரு நாடுகளுக்கும் 14 நாட்கள் பயண வரலாற்றைக் கொண்ட பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா பரவல் சூழ்நிலை காரணமாக சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இப்பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் இயங்கும் அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.