அபாய எச்சரிக்கை: கடலினுள் மூழ்கும் MV X-Press Pearl கப்பல் : எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அபாய எச்சரிக்கை: கடலினுள் மூழ்கும் MV X-Press Pearl கப்பல் : எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு!

கடலில் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படிகின்றது. 

அது தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கப்பலில் பரவிய தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடற்படையினர் கப்பலை கண்காணித்ததுடன், கப்பலின் பின்பகுதி அதிகமாக நீரில் மூழ்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நீர்கொழும்பு முதல் பானந்துரை வரையிலான கடற்வழி பாதையை பயன்படுத்துவது உடன் அமுலுக்கு வரும் மீன் பிடிக்கச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எஞ்சின் அறை உள்ளிட்ட பகுதிகளில் நீர் உட்புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். மீட்பு நிறுவனம், வர்த்தகக் கப்பல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

மேலும் குறித்த கப்பலை நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.