கல்முனையின் பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சிவப்பு நிற டொல்பின்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனையின் பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சிவப்பு நிற டொல்பின்!


கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 5 நீளமான சிவப்பு நிற டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.


இது தொடர்பில் மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர் பொலிஸார் சென்று பார்வையிட்டனர்.


இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.


ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பல வகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரை பகுதியில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.


-பாறுக் ஷிஹான்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.