
சந்தேக நபர் தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜம்புரெலிய வசிக்கும் 26 வயதுடைய மேற்படி சந்தேக நபர் மீது, சிறுமியை பல்வேறு இளைஞர்களுடன் சிறுமியை பாலியில் நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவித்ததாகவும், வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.