துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் திடீரென கீழே விழுந்து மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் திடீரென கீழே விழுந்து மரணம்!


யாழ். புத்தூர் பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (17) காலை புத்தூர் - நிலாவரை வீதி வழியாக சென்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க குறித்த நபரே இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.

அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.