அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைப்போருக்கு எதிராக புதிய சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைப்போருக்கு எதிராக புதிய சட்டம்!

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு எதிர்கொண்டு அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

அதற்காக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் நுகர்வோரும் பாதிக்காதவகையில் சாதாரண விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இருந்தபோதும் ஒருசில வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை களஞ்சியசாலைகளில் பதுக்கிவைத்துக்கொண்டு விலை அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

அதனால் இந்த நடவடிக்கையை தடுப்பதற்காக, அத்தியாவசிய பொருட்களை தொகையாக வைத்திருக்கும் மொத்த வியாபாரிகள் தங்கள் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தொகை தொடர்பில் உண்மை தகவல்களை நுகர்வோர் அதிகாரசபையில் பதிவு செய்யும் வேண்டும் என கருதி வரத்தமானி அறிவிப்பு வெளியிட இருக்கின்றோம்.

அதன் பிரகாரம் அரிசி, பால்மா, கோதுமை, சோளம், சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக களஞ்சியப்படுத்தி வியாபாரம் செய்பவர்கள் தங்களிடம் இருக்கும் தொகை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். அத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு விவசாயிகளுக்கு சம்பந்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.