பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஓர் வர்த்தமானி வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஓர் வர்த்தமானி வெளியானது!


பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு தடுப்புக் காவல் என்று பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின், பிரிவு 09 இன் கீழ் இந்த வர்த்தமானி 2021, ஜூன் 04 ஆம் திகதி இடப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.


1979, எண் 48, பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 09 ஆவது பிரிவின் கீழ், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வளாகங்கள் நோக்கங்களுக்காக தடுப்புக்காவலாக இருக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பதாக இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களை தடுத்து வைக்க பயன்படுத்தப்படும்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.