பாடசாலைகளை ஆரம்பிக்க யோசனை - பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளை ஆரம்பிக்க யோசனை - பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா?

தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய பிற்பாடு பாடசாலைகளை தொடங்க கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது மேல் குறிப்பிட்ட தரங்களில் சுமார் 700,000 மாணவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும்  சுமார் 279,000 நபர்கள் இருப்பதாகவும செயலாளர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் தடுப்பூசி போடுமிடத்த எதிர்வரும் ஜூலை மாதத்தில் பாடசாலைகளை தொடங்க முடியும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இதற்கான திட்டவட்டமான கால அவகாசம் இல்லை என்றும், இரண்டு அளவுகளையும் கொடுக்க முடியாவிட்டால், ஒரு டோஸ் ஆவது வழங்கி பாடசாலைகளை திறப்பதே நோக்கம் என தெரிவித்தார். 

தற்போது திட்டமிடப்பட்டுள்ள தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலையின் அடிப்படையில் இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க அமைச்சகம் பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்துமாறு அமைச்சிடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.