“நாயைப்போன்று குரைக்காதீர்” - பாராளுமன்ற அமர்வில் சுமந்திரன் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“நாயைப்போன்று குரைக்காதீர்” - பாராளுமன்ற அமர்வில் சுமந்திரன் அதிரடி!

அரசியல் கைதிகள் பிரச்சினையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (23) பாராளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது.

அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறுக் கூறினார்.

அதேநேரம், தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசியல் நாடகம் நடத்த வேண்டாம் என்றும் சுமந்திரன் அரசாங்கத்திடம் கூறினார்.

அத்தோடு கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.