நாடு ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தினை கையாள்வது அரசாங்கத்திற்கு கடினம் என்றால், அரசு கையாள இருக்கும் மாற்று வழிகள் எவை என்றும் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தற்போதைய கொரோனா பரவலாகும் எனவும், மேலும் அதைக் கட்டுப்படுத்தும் பணிக்குழு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திணைக்களத்தின் தலைவரான இராணுவத் தளபதியால் தலைமைத்துவ சுமைகளைத் தாங்க முடியாது இருப்பதாகவும அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா கட்டுப்படுத்தலை அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். (யாழ் நியூஸ்)