VIDEO: ரணிலின் இன்றைய பாராளுமன்ற உரை - பலருக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ரணிலின் இன்றைய பாராளுமன்ற உரை - பலருக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டு!


ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

நாடு ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தினை கையாள்வது அரசாங்கத்திற்கு கடினம் என்றால், அரசு கையாள இருக்கும் மாற்று வழிகள் எவை என்றும் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.  

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தற்போதைய கொரோனா பரவலாகும் எனவும், மேலும் அதைக் கட்டுப்படுத்தும் பணிக்குழு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

திணைக்களத்தின் தலைவரான இராணுவத் தளபதியால் தலைமைத்துவ சுமைகளைத் தாங்க முடியாது இருப்பதாகவும அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்படுத்தலை அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.