குருநாகல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் நால்வர் சிறையை உடைத்து தப்பிச் சென்றுள்ளனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள், நீதிமன்ற அமர்வொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே தப்பிச் சென்றுள்ளனர்.
20,26 மற்றும் 27 வயதுகளையுடைய இந்த சந்தேகநபர்கள் குருநாகல் வெல்லவ, துருளியகம ,மாவத்தகம ,தெல்கொல்ல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
ஏனைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.
போதைப்பொருள் விற்பனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள், நீதிமன்ற அமர்வொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே தப்பிச் சென்றுள்ளனர்.
20,26 மற்றும் 27 வயதுகளையுடைய இந்த சந்தேகநபர்கள் குருநாகல் வெல்லவ, துருளியகம ,மாவத்தகம ,தெல்கொல்ல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
ஏனைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.