காதி நீதிமன்றம் ரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக நீதி அமைச்சார் சில காரணங்களை Jaffna Muslim இணைய தளத்திற்கு வெளியிட்டுள்ளார்.
அதாவது தான் நான்கு திருமணம்,
காதி நீதிமன்றம் ரத்துச் செய்வது தொடர்பாக எந்த வித அமைச்சரவை பத்திரத்தையும் சமர்பிக்க வில்லை எனவும், தான் முஸ்லிம் விவாகம் சம்பந்தமான சில சீர் திருத்தங்களை முன் வைத்ததாகவும்,
இதன்போதே அமைச்சரவை நான்கு திருமண மற்றும் காதி நீதிமன்றத்தை ரத்துச் செய்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து அவற்றை ரத்துச்
செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது இது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமார்பிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்.
குறிப்பிட்ட குழுவின் அறிக்கை வரும் வரையில் நீதி அமைச்சார் என்ற வகையில் முடிவை தள்ளி வைத்திருக்கலாம்.
அல்லது இது சம்பந்தமாக காலக் கெடுவை
வேண்டி ஆற்சோபனை தெரிவிக்க பூரண அனுமதியுள்ளது.
அல்லது குழுவின் முடிவு வரும் வரையில் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம். இவை ஒன்றும் நடை பெறாத பட்சத்தில் இவை ரத்துச் செய்யப்பட்டுள்ளமை. முஸ்லிம்களின் உறிமைகள் என்ற ரீதியில் மிகவும் கவலைகுறிய விடயமாகும்.
முஸ்லிம்கள் காலாகாமாக அனுபவித்து வந்த உரிமைகள்
பறிக்கப்படுவது, அதுவும் ஒரு முஸ்லிம் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் போது பறிக்கபடுவது
மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
(பேருவலை ஹில்மி)