தனியார் பேருந்து சேவைகளை முழுமையாக நிறுத்தும் அபாயம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் பேருந்து சேவைகளை முழுமையாக நிறுத்தும் அபாயம்!!

பேருந்து உரிமையாளர்கள் 9 பில்லியன் வரை இழப்பை சந்தித்துள்ளதால் விரைவில் தனியார் பேருந்து சேவைகளை நிறுத்தவேண்டிய நிலையேற்படலாம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருட காலத்தில் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் தனியார் போக்குவரத்து தொழில்துறை பெரும் நெருக்கடியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்து சாரதிகளாக -உதவியாளர்களாக பணிபுரிந்த பலர் புதிய தொழில்களிற்கு சென்றுள்ளனர் அவர்கள் திரும்பி வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து சேவையை சேர்ந்தவர்களிற்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர்அதன் காரணமாக அவர்கள் மீண்டும் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

சராதிகளும் உதவியாளர்களும் பயணிகளுடன் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள் யார் ஆபத்தை எதிர்நோக்க முன்வருவார்கள்,அனைவரும் தங்கள் குடும்பங்களை நேசிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.