அதனடிப்படையில், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் பயண வரலாறு கொண்ட பயணிகள் இலங்கைக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தடையானது ஜூலை 01 (0001 மணி) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது. (இலங்கை உள்ளூர் நேரம்).
இருப்பினும், மேற்கூறிய நாடுகளினூடான போக்குவரத்து (transit) அனுமதிக்கப்படும்.
2021 ஜூலை 13 ஆம் திகதி (இலங்கை உள்ளூர் நேரம்) 2359 மணி வரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)